Iraivan Trailer [File Image]
ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்திருக்கும் “இறைவன்” திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இயக்குனர் அஹ்மத் இயக்கிய, இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவி ஒரு போலீஸ் கேரக்டரில் நடிக்கிறார். தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியும், நயன்தாராவும் மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.
ட்ரைலரை வைத்து பார்க்கும்பொழுது, இறைவன் திரைப்படம் பெண்களை வெல்வேறு விதமாக கொடூரமாக கொலை செய்யும் சைக்கோ கில்லர் பற்றி விவரிக்கும் திரில்லர் படமாகும். வில்லன் ஒரு சைக்கோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்த கொலைகளை விசாரிக்கும் தீவிர போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவி வருகிறார்.
பேஷன் ஸ்டுடியோவின் தயாரிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஹரி கே வேதாந்தின் ஒளிப்பதிவு மற்றும் மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்துள்ளார். ஆகஸ்ட் 25-ம் தேதி இப்படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பட ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதாவது, செப்டம்பர் 28-ம் தேதி இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்த ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சைரன் படத்திலும் நடித்து வருகிறார். தற்போது, சைரன் படத்திற்கான இறுதிக்கட்ட பணிகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம், நயன்தாரா, அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் அறிமுகத்திற்கு தயாராகி வருகிறார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…