vj and sk [File Image]
சிவகார்த்திகேயன் : விஜய் சினிமாவை விட்டு விலகிய பின் அவருடைய இடத்தை சிவகார்த்திகேயன் பிடித்துவிடுவார் என தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இப்போது பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக இருப்பதில் நடிகர் விஜய்யும் ஒருத்தர் என்று கூறலாம். இவருடைய படங்கள் எல்லாம் எந்த அளவுக்கு வசூல் செய்கிறது என்பதனை பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று கூட இல்லை. இருப்பினும் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி இருப்பதால் அவர் வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவும் இருக்கிறார்.
எனவே, அரசியலில் களமிறங்கும் காரணத்தால் அவர் தனது 69-வது படத்தில் நடித்து முடித்த பிறகு சினிமாவை விட்டு விலகவும் இருக்கிறார். இதன் காரணமாக விஜயின் இடத்தை எந்த ஹீரோ பிடிக்க போகிறார் அவருக்கு அடுத்த படியாக யார் என்ற கேள்வி தான் சமூக வலைதளத்தில் எழுந்து கொண்டு இருக்கிறது.
இந்த சூழலில், பலரும் விஜய் இடத்தை சிவகார்த்திகேயன் தான் பிடிப்பார் என்று கூறிவருகிறார்கள். அந்த வகையில், வேட்டையாடு விளையாடு படத்தை தயாரித்த பிரபல தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது விஜயின் இடத்தை சிவகார்த்திகேயன் தான் பிடிப்பார் என வெளிப்படையாக பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய மாணிக்கம் நாராயணன் ” சிவகார்த்திகேயனின் இப்போது மார்க்கெட்டை பார்த்தால் விஜய்க்கு பிறகு அவருடைய இடத்தை அவர் பிடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்று தான் நான் சொல்வேன். இதனை நான் வெளிப்படையாகவேசொல்வேன். இப்போது அவருடைய படங்களை பார்ப்பதில் வைத்து நான் இதனை சொல்கிறேன் ” எனவும் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்தெரிவித்துள்ளார் .
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…