சாதி படங்கள் மூலம் 3 கோடிக்கு சொகுசு கார்.? பா.ரஞ்சித்தை கடுமையாக விமர்சித்த பிரபல இயக்குனர்.!

Published by
பால முருகன்

இயக்குனர் பா.ராஞ்சித் சாதிப் படங்களைத் எடுப்பதாகவும், இதன் மூலம் பணம் சம்பாதித்து கார் வாங்கினார் என ஹிட் படங்களை இயக்கிய பிரபல இயக்குனரான பிரவீன் காந்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” பா.ரஞ்சித் சமீபத்தில் பெரிய கார் ஒன்றை வாங்கி இருந்தார். அந்த காரின் விலை 2-3 கோடி ரூபாய் என்று நான் கேள்விப்பட்டேன்.

அவர் கார் வாங்கியது இது நல்ல விஷயம், அவரை வாழ விடுங்கள். ஆனால், நான் சொல்ல வருவது ஒன்னு தான் அது என்னவென்றால், நல்ல படங்களை எடுங்கள் என்பதை தான். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் புதிய ஆடி கார் வாங்கினார். அவரைப் பற்றி நாங்கள் எதுவும் சொல்லவில்லை. ஏனென்றால், அவர் நல்ல படங்களை எடுக்கிறார் சம்பாதித்து வாழ்கிறார்.

ஆனால், பா ரஞ்சித் சாதிப் படங்களைத் எடுக்கிறார். இதன் மூலம் நீங்கள் நன்றாக சம்பாதிக்கிறீர்கள். சாதி படம் எடுத்துவிட்டு சமூகத்தை மாற்ற வந்தீர்கள் என்று பொய் சொல்லாதீர்கள். அது உங்கள் நோக்கமாக இருந்தால், படம் எடுத்துவிட்டு அதில் வரும் பணத்தை நான் 5 கோடி சம்பாதித்தேன், நான் மக்களுக்கு 4.5 கோடி நன்கொடை தருகிறேன் என கூறி அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

அப்படி நீங்கள் பெரிய அளவில் உதவி செய்தால் நீங்கள் சாதி சார்ந்த படங்களை எடுக்கலாம், அதை நான் விமர்சிக்க மாட்டேன், அதைப்பற்றி நான் வாயையே திறக்கமாட்டேன். ஆனால், நீங்கள் உங்கள் சம்பளத்திற்கு சாதிப் படங்களை எடுத்தால், அது சரியில்லை. என்னைப்பொறுத்தவரை அது மிகவும் தவறு” எனவும் இயக்குனர் பிரவீன் காந்தி தெரிவித்துள்ளார்.

இவர் பேசியதை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும், இயக்குனர் பிரவீன் காந்தி ராட்சகன், புலிப்பார்வை, துள்ளல், ஜோடி, உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பை சொல்லும் போட்டியாளர்? டேஞ்சர் ஜோனில் சிக்கிய இருவர்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…

42 mins ago

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

1 hour ago

‘நிரந்தர பொதுச்செயலாளர்’ விவகாரம்., தவெக தொண்டர்களுக்கு கண்டிஷன் போட்டபுஸ்ஸி ஆனந்த்.!

சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…

2 hours ago

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

2 hours ago

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அலர்ட்!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…

2 hours ago

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

3 hours ago