Categories: சினிமா

லியோ பட சர்ச்சை.. விஜய் மீது நடவடிக்கை.? தணிக்கை வாரியம் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார்.!

Published by
மணிகண்டன்

லியோ பட பாடல் சர்ச்சை தொடர்பாக விஜய் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என தணிக்கை வாரியம் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் அக்டோபரில் வெளியாக உள்ளது. இப்படத்தில் இருந்து நான் ரெடி பாடல் அண்மையில் வெளியானது. அதில் விஜய் புகைபிடிக்கும் படி தோன்றி இருந்தது. புகைபிடிப்பது , மது அருந்துவது தொடர்பான பாடல் வரிகள் மிகுந்த சர்ச்சையை எழுப்பியது.

மேலும் இது தொடர்பாக தணிக்கை வாரியம் மற்றும் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. போதை பழக்கத்தை ஆதரிக்கும் விதமாக விஜய் படத்தில் நடிக்கிறார் ஆதலால் லியோ பாடலுக்கு தடை விதிக்க வேண்டும். விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தணிக்கை வாரியத்திடம் RTI செல்வம் என்பவர் புகார் அளித்து இருந்தார்.

இந்த புகார் மீது மத்திய தணிக்கை வாரிய தலைவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி அவர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் RTI செல்வம் புகார் அளித்து உள்ளார். மேலும் விஜய் மீதான புகார் மீது அவருக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார் என்றும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டது.

இளைஞர்கள் போதை பொருள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக நான் ரெடி பாடல் அமைந்துள்ளதால் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னைகாவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

4 minutes ago

பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…

25 minutes ago

வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…

54 minutes ago

“பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நள்ளிரவில் மிரட்டப்பட்டுள்ளனர்” – ஆளுநர் ஆர்.என்.ரவி.!

உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…

1 hour ago

“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!

கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…

3 hours ago

காஷ்மீர் பயங்கரவாதிகள் ‘சுதந்திரப் போராளிகள்’.., புகழ்ந்து பேசிய பாக்., துணைப் பிரதமர்.!

இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…

3 hours ago