பரபரப்பு… 3 பேர் கைது…! ‘பிச்சைக்காரன் 2’ படக்குழு மீது வழக்கு.?

Default Image

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பரபரப்பான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அது என்னவென்றால், “பிச்சைக்காரன் 2” படத்திற்கான படப்பிடிப்பு சென்னை உயர்நீதிமன்ற வளாக பகுதியில் நடைபெற்று வரும் நிலையில், அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட படக்குழுவை சேர்ந்த  3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதையும் படியுங்களேன்- பட்ஜெட் சிறுசு… வசூல் ரெம்ப பெருசு…. தமிழகத்தில் கல்லாகட்டிய டாப் 10 சின்ன படங்கள்.!

இப்படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் டிரோன் உதவியுடன் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். மேலும், அனுமதியின்றி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஐகோர்ட் வளாகம், மாநகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் ட்ரோன் பறக்கவிட்டதாக படக்குழு மீது புகார் அளிக்கப்பட்டது

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ட்ரோன் பறக்கவிட்ட பிச்சைக்காரன் 2 படக்குழுவினர்களான,  ரூபேஷ், நவீன்குமார், சுரேஷ், ஆகிய 3 பேர் கைது செய்தனர். பிறகு  ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்