8 விருதுகள் பெற்ற பாடகரின் இளைஞர்களுக்கான அட்வைஸ் இது தானா !

Default Image

8 விருதுகள் பெறும் முதல் பாடகர் யேசுதாஸ்க்கு 8வது முறையாக தேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது . தேசிய விருது பற்றி யேசுதாஸ் கூறியதாவது:

இன்று (நேற்று) காலையில் நான் வழக்கம்போல எழுந்து பிராக்டீஸ் பண்ணிக்கொண்டிருந்தேன். என் மகன் வந்து என்னை கட்டித் தழுவினான். நான் வழக்கம்போல பாசத்தை பொழிகிறான் என்று தான் நினைத்தேன். அதற்பிறகு சொன்னான். உங்களுக்கு தேசிய விருது அறிவித்திருக்கிறார்கள். இது 8வது விருது என்றும் சொன்னான்.

என் குருநாதர் சொல்வார் லட்சுமி (பணம்) பின்னாடி போகாதே அவள் எப்போ வேணாலும் உன்னை கைவிட்டு விடுவாள். சரஸ்வதி (ஞானம்) பின்னால் போ எப்போதும் கூடவே இருப்பாள் என்று. அதைத்தான் நான் இப்போதும் கடைபிடிக்கிறேன். ஸ்ருதி சுத்தமாக இருந்தால் பணமும், புகழும் தானாக வரும்.  இன்றைய இளைஞர்களுக்கு ஒன்று மட்டும் சொல்வேன் நேரத்தை வீணாக்காதீர்கள். பயனுள்ள வழியில் அதனை செலவு செய்யுங்கள் உங்களுக்கு எல்லாம் வந்து சேரும். விருது கொடுப்பவர்களுக்கும், எனது ரசிகர்களுக்கும் நன்றிகள் கோடிகள். என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்