திரைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு வருடம் தோறும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தேசிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில், இன்று ( ஜூலை 22 ) மாலை 4 மணிக்கு 68-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா டெல்லியில் அறிவிக்கப்பட உள்ளது.
2020ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்படவுள்ளது. 2020-இல் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருததால் சூரரைப் போற்று, பொன்மகள் வந்தால், பென்குயின், மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்கள் நேரடியாக சில ஓடிடி தளங்களில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது.
இந்த படங்கள் தணிக்கை சான்றிதழை முறையாக பெற்றதால், தேசிய விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று, ஜெய்பீம் மற்றும் கபெ ரணசிங்கம் ஆகிய படங்கள் போட்டியில் கலந்து கொண்டுள்ளது.
இன்று அறிவிக்கப்படவுள்ள 68-வது தேசிய விருதில் நடிகர் சூர்யா விருது வாங்குவார் என ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த் ஆண்டு தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் கலைப்புலி தானு உள்ளிட்டோருக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…