Categories: சினிமா

‘தலைவர் 170’ படத்தில் இணைந்த 3 நடிகைகள்! வரிசைகட்டி வெளியான அறிவிப்புகள்…

Published by
கெளதம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 படத்தில் மூன்று இளம் நடிகைகள் நடிக்க இருப்பதாக படக்குழு அடுத்தடுத்த போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. 

ஜெயிலர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அடுத்த படமான ‘தலைவர் 170’ படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்க, லைகா புரொடக்‌ஷன்ஸ் பேனரின் கீழ் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். இந்த தகவலை தயாரிப்பு நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும், படத்தின் இயக்கம், இசை, தாயரிப்பு ஆகியவற்றை இந்த மூவரும் தான் கவனித்து வருவதாக நேற்றைய தினம் படக்குழு தனித்தனி போஸ்டர்களை வெளியிட்டு அறிவித்தது. இந்நிலையில், இன்று இந்த படத்தில் மூன்று நடிகைகள் நடிக்க இருப்பதாக இன்று காலை முதல் வரிசையாக தனித்தனி போஸ்டர்களை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

அந்த அறிவிப்பின்படி, சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து பிரபலமான நடிகை துஷாரா விஜயன், இறுதி சுற்று நடித்து பிரபலமானநடிகை  ரித்திகா சிங் மற்றும்  அசுரன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை மஞ்சு வாரியர் ஆகியோர் நடிக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று நடிகைகளும் ரஜினியுடன் இணைவது இதுவே முதல் முறை, இயக்குனர் டி.ஜே.ஞானவேல் மற்றும் சூப்பர் ஸ்டார் கூட்டணியும் இது தான் முதல் முறை ஆகும். ஆனால்,  தலைவர் 170 படத்திற்கு இசையமைக்கும் அனிருத், ரஜினிகாந்த் உடன் இணைவது நான்காவது முறையை  குறிக்கிறது.

 

Published by
கெளதம்

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 hour ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago