அமீர் கான் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியான “லால் சிங் சத்தா” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது என்றே கூறலாம். வசூல் ரீதியாகவும் இந்த படம் பெரிய தோல்வியை சந்தித்த்து. இந்த நிலையில், பிரபல நடிகையான கங்கனா ரனாவத் சமீபத்திய பேட்டி ஒன்றில் “லால் சிங் சத்தா” படத்தின் தோல்வி குறித்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் “என்னுடைய கேள்வி ஒன்றே ஒன்று தான் மக்கள் எதற்காக கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அமீர் கானின் “லால் சிங் சத்தா” போன்ற படங்களைப் பார்ப்பதற்காக எதற்காக செலவிட வேண்டும் என்பதுதான். 2 கோடி ரூபாய்க்கு நடிப்பை கொடுத்து விட்டு 200 கோடி ரூபாயை அவர் வாங்கிக் கொள்கிறார். எத்தனை தோல்விகள் வந்தாலும் அவர் தனது படங்களுக்கு 200 கோடி ரூபாய் வாங்கிக்கொள்கிறார்.
சினிமா துறையில் இந்த அநியாயமான நடைமுறை இன்னும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்று எனக்கு தெரியவில்லை. “லால் சிங் சத்தா” திரைப்படம் தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணம் அமீர்கானின் பேச்சுதான் முதல் காரணம். சூப்பர் ஸ்டாருக்குள்ள எல்லா சலுகைகளையும் அமீர்கான் பெற்றுகொள்கிறார் .
இதையும் படியுங்களேன்- அச்சசோ … பார்வையாலே இளசுகளை கிறங்கடித்த அணு…கிறுகிறுக்க வைக்கும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.!
தனி விமானத்தில் தான் அவர் பயணிக்கிறார். உலகத்தின் முன்னால் நமது நாட்டை சகிப்புத்தன்மையற்றது என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு சொல்லி களங்கப்படுத்தினார். ஒரு படம் தோல்வியடைந்தால் சம்பளத்தை குறைக்காமல் இருப்பது நியாயாமே இல்லை” என அமீர்கானை விமர்சித்துள்ளார் நடிகை கங்கனா ரணாவத்.
சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…