15ம் தேதி வருகிறது மிரட்டலான கதை..! புரட்டிப்போடும் கதை..!

Default Image

ராம் திரைப்படம் 2005ல் தமிழில் வெளிவந்த திரைப்படமாகும்.இதில் கதாநாயகன் ஜீவா மனநோயாளியாக நடித்துள்ளார்.

மகன் அவனது தாயைக் கொன்று விட்டதாக வரும் செய்தி கேட்டு அதிர்ந்து போகும் காவல்துறையினர் தமது தேடுதலின் பின்னர் உண்மையான கொலையாளி யார் என்பதனைக் கண்டுபிடிக்கின்றனர்.இதற்கிடையே கொலைகாரனாக கைது செய்யப்படும் காதலனைப் பார்த்து மனம் வருந்துகின்றார் ராமின் காதலி.ராமின் தாய் அவனின் காதலியின் சகோதரானால் கொல்லப்படும் செய்தி கேட்டறிகின்றான் ராம்.மேலும் அவன் கஞ்சா போன்ற போதைபொருட்களினை உபயோகிப்பதனைப் பார்த்த ராமின் ஆசிரியரான தாயாரை யாருக்கும் தெரியாதவண்ணம் கொலையும் செய்யப்படுகின்றார்.அதே சமயம் அங்கு வந்த ராம் இதனைப் பார்த்து திகைத்து நிற்கையில் தாயாரின் வயிற்றில் குத்தப்பட்டிருந்த கத்தியினை தன் கையிலெடுத்து பின் மயங்கி சரிகின்றார்.இதற்கிடையில் கூடும் காவல்துறையினர் ராம் மீது கொலைப்பழியினையும் சுமத்துவது பரிதாபம்.இறுதியில் கொலைகாரனாகக் கருதப்பட்ட ராம் செய்யாத தவற்றிற்காக சிறை சென்றதற்காகவும் தாயாரைக் கொலை செய்தவனைப் பழிவாங்குவதற்காகவும் மீண்டும் கொலை செய்யத்தூண்டப்படுகின்றான். இப்படிப்பட்ட கதையை இயக்கிய ராம் தற்போது பேரன்பு எனும் படத்தை இயக்கியுள்ளார்.அந்த படத்தின் பின்புலம், மையக்கருத்து என்ன என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் இசை மற்றும் டீசர் வரும் 15ம் தேதி வெளிவரும் என அறிவிப்பு வெளியானது…

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்