விஜய் ஆண்டனி நடித்துள்ள “காளி” படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கம் செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம், உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா இயக்கிய காளி படத்தை வெளியிட தடை விதித்தது.
காளி திரைப்படத்தின் தயாரிப்பாளர் விஜய் ஆன்டனி மனைவி பாத்திமா, ஏற்கனவே அண்ணாதுரை என்ற படத்தை தயாரித்திருப்பதாகவும், அதனை வெளியிட்டதில் தமக்கு 5 கோடியே 79 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கூறி பிக்சர் பாக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அலெக்சாண்டர் வழக்குத் தொடர்ந்திருந்தார். இழப்பு தொகையைத் தராமல் காளி படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதி, காளி திரைப்படத்திற்கு தடைவிதித்து உத்தரவிட்டார்.
மேலும், வரும் 11 ஆம் தேதிக்குள் இழப்புத் தொகையைச் செலுத்தி விட்டால், தடை தானாகவே நீங்கி விடும் எனவும், தவறும் பட்சத்தில் தடை நீடிக்கும் எனவும் நீதிபதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விஜய் ஆண்டனி நடித்துள்ள “காளி” படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கம் செய்தது சென்னை உயர்நீதிமன்றம். பிக்சர் பாக்ஸ் நிறுவனத்துக்கு ரூ 2 கோடிக்கான வங்கி உத்தரவாதத்தை செலுத்தி படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…