படத் தயாரிப்பு நிறுவனத்திடம் வாங்கிய ஐம்பது இலட்ச ரூபாய் முன்பணத்தை அக்டோபர் 31ஆம் நாளுக்குள் நடிகர் சிலம்பரசன் திருப்பிச் செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், ‘பேஷன் மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. அதில் அரசன் என்கிற திரைப்படத்தில் நடிக்கச் சிலம்பரசனுக்கு முன்பணமாக, ஐம்பது இலட்ச ரூபாய் கொடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
ஒப்பந்தப்படி, சிலம்பரசன் செயல்படாததால் முன்பணத்தை வட்டியுடன் சேர்த்து வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ், நடிகர் சிலம்பரசன் 85இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்க்கு நான்கு வாரங்களில் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஒப்பந்தத்தில் வட்டி செலுத்த வேண்டும் எனக் குறிப்பிடவில்லை என்பதால் உத்தரவை மாற்றியமைக்குமாறு சிலம்பரசன் சார்பில் கோரப்பட்டது. இதையடுத்து அக்டோபர் 31ஆம் நாளுக்குள் நடிகர் சிலம்பரசன் ஐம்பது இலட்ச ரூபாயைப் படத் தயாரிப்பு நிறுவனத்துக்குத் திருப்பிச் செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். குறித்த நாளில் பணத்தைச் செலுத்தாவிட்டால் அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்தார்.
DINASUVADU
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…