ரஜினிகாந்த் தனது புதிய படத்தை ரிலீஸ் செய்வதற்கு கூட்டம் சேர்க்கவே ஏதாவது ஒன்றை சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார் என்று இயக்குநர் ஷக்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கமல், ரஜினி இருவரும் ஆட்சியை பிடிக்க நினைப்பது காமெடியாக உள்ளது என்று கூறினார்.
கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: ஜெயலலிதாவுக்குப் பிறகு முதல்வரும், துணை முதல்வரும் அதிமுகவை வழிநடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகள் கூறுவதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். எப்படியாவது ஆட்சியைப் பிடித்து முதல்வராகிவிடலாம் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். அதிமுக இருக்கும்வரை அது ஒருபோதும் நடக்காது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழகத்தில் புதிது புதிதாக கட்சி ஆரம்பித்து கொடியை அறிமுகப்படுத்துகிறார்கள்.
நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடிக்க நினைப்பது காமெடியாக உள்ளது. கமல் மைக்கை பிடித்துப் பேச தெரியாதவர். ரஜினிகாந்த் தனது புதிய படத்தை ரிலீஸ் செய்வதற்கு கூட்டம் சேர்க்கவே ஏதாவது ஒன்றை சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார். இந்நிலையில், இவர்கள் இருவரும் எப்படி ஆட்சியைப் பிடிப்பார்கள்? என்றார் ஷக்தி சிதம்பரம்.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…