ரஜினி , கமலை சீண்டும் பிரபல இயக்குனர்..!!

Default Image

ரஜினிகாந்த் தனது புதிய படத்தை ரிலீஸ் செய்வதற்கு கூட்டம் சேர்க்கவே ஏதாவது ஒன்றை சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார் என்று இயக்குநர் ஷக்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கமல், ரஜினி இருவரும் ஆட்சியை பிடிக்க நினைப்பது காமெடியாக உள்ளது என்று கூறினார்.

Image result for ஷக்தி சிதம்பரம்

கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: ஜெயலலிதாவுக்குப் பிறகு முதல்வரும், துணை முதல்வரும் அதிமுகவை வழிநடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகள் கூறுவதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். எப்படியாவது ஆட்சியைப் பிடித்து முதல்வராகிவிடலாம் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். அதிமுக இருக்கும்வரை அது ஒருபோதும் நடக்காது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழகத்தில் புதிது புதிதாக கட்சி ஆரம்பித்து கொடியை அறிமுகப்படுத்துகிறார்கள்.

நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடிக்க நினைப்பது காமெடியாக உள்ளது. கமல் மைக்கை பிடித்துப் பேச தெரியாதவர். ரஜினிகாந்த் தனது புதிய படத்தை ரிலீஸ் செய்வதற்கு கூட்டம் சேர்க்கவே ஏதாவது ஒன்றை சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார். இந்நிலையில், இவர்கள் இருவரும் எப்படி ஆட்சியைப் பிடிப்பார்கள்? என்றார் ஷக்தி சிதம்பரம்.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்