ரஜினியை எதிர்த்து நான் நிற்பேன்! எங்களை நாங்களே ஆண்டுகொள்கிறோம்!!

Default Image

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏற்கனவே தனது ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றங்களாக மாற்றிவிட்டார். இதனை தொடர்ந்து விரைவில் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்து வருகிறார். கட்சி வேலைகள் 90 சதவீதம் முயடிவடைந்து விட்டதாகவும் விரைவில் கட்சி பெயரை அறிவிப்பதாகவும் அறிவித்துள்ளார். 

இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான கவுதமன் இன்று அரசியல் கட்சியினை தொடங்கி வைத்தார். அதனை தொடங்கிய பிறகு பேசிய கவுதமன், நடிகர் ரஜினியையும், கமலையும் நல்ல நடிகர்களாக மதிக்கிறோம். ஆனால் அவர்கள் கதி தொடங்கி எங்களை ஆள நினைப்பதை நாங்கள் விருமபவில்லை. எங்களை மற்றவர்கள் ஆண்டதே போதும் இனிமேல் நாங்களே ஆண்டு கொள்கிறோம்.

தமிழர்களையும், தமிழ் பண்பாட்டையும்  சீர்குலைக்க நினைக்க நினைப்பது யாராக இருந்தாலும், அவர்தான் எங்களுக்கு முதல் எதிரி என்றும், ரஜினி எந்த தேர்தலில் நின்றாலும் அவரை எதிர்த்து நான் நிற்பேன் எனவும் கூறினார்.

source : tamil.CINEBAR.IN

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்