நடிகர் சித்தார்த் சமீபத்தில் நடித்த அவள் படம் திகில் படமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதே திகில் பாணியில் அடுத்த படமும் தயாராக உள்ளது. இதற்கான பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நடிகை கேத்ரின் தெரசா இணைந்துள்ளார். நடிகர் சித்தார்த் மற்றும் கேத்ரின் தெரசா இருவரும் தெலுங்கு ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவகள் என்பதால் தெலுங்கிலும் இப்படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் சாய் சேகர் இயக்குகிறார். கபீர் சிங் , காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
ஜூலை 13 – ம் தேதி தொடங்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகை கேத்ரின் தெரசா நடிக்கும் காட்சிகள் முதலில் படமாக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை சென்னை, புதுச்சேரியில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…