முதன் முதலாக தொகுப்பாளராக பணியாற்றபோகும் இயக்குனர் ராம் கோபால் வர்மா!

Default Image

தெலுங்கு முன்னனி இயக்குனராக இருபப்வர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. இவர் நடிகர் சூர்யாவை வைத்து ரத்த சரித்திரம் எனும் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கி இருந்தார். இவர் தற்போது ஒரு படத்தை தயாரித்து உள்ளார்.

பைரவா கீதா எனும் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படம் உண்மை கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.  இப்படத்தை சித்தார்த்தா என்பவர் இயக்கியுள்ளார். தனஞ்செய், அய்ரா மோர் ஆகியோர் ஹீரோ ஹீரோயினாக நடித்துள்ளனர். இப்படம் நவம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இதன்.பிரீமியர்  ஷோ முக்கிய பிரமுகர்களுக்கு காண்பிக்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் ராம் கோபால் வர்மா  தொகுப்பாளராக பணியாற்ற உள்ளார். இதனை அவர் தனது டிவிட்டர் தளத்தில் அறிவித்துள்ளார்.

source : cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்