மாணவிகள் பிரியா வாரியார் போல் கண்ணடித்தால் ஒரு வருடம் சஸ்பெண்டு?கல்லூரி நிர்வாகம் அதிரடி …

Default Image

தனியார் கல்லூரி நிர்வாகம் நடிகை பிரியா வாரியாரைப் போல கண்ணடிப்பவர்கள் மீது ஒரு வருட சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என  அறிவித்துள்ளதால் மாணவிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஒரு அடார் லவ்’ மலையாள படத்தின் ‘மாணிக்ய மலராய பூவி’ பாடல் சமீபத்தில் வெளியானது. அந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கும் பிரியா பிரகாஷ் வாரியர் ட்ரெண்டாகி வருகிறார்.

இதில் நடித்துள்ள பிரியா வாரியர் செய்யும் கண் மற்றும் புருவ அசைவுகள் வீடியோ வெளியான சில நாட்களிலேயே சமூக வலைதளங்களில் எண்ணிக்கை லட்சங்களை எட்டியது.பிரியா வாரியர் செய்யும் கண் மற்றும் புருவ அசைவுகள் இளைஞர்களையும், இளம் பெண்களையும் கட்டிப்போட்டுள்ளது.

இதை தொடர்ந்து, பிரியா பிரகாஷ் வாரியரை போன்றே விளையாட்டாக கண் அடித்து பலர் சமூக வலை தளத்தில் வீடியோ வெளியிடுகிறார்கள். மேலும் கல்லூரி பெண்கள் பிரியா பிரகாஷ் வாரியாரைப் போல கல்லூரி வகுப்பு அறையில் கண்ணடித்து கலவரம் செய்கின்றனர்.

இந்நிலையில், கோவையில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் படிக்கும் மாணவிகள் வகுப்பில் அதே வேலையை செய்கிறார்களாம். கோவை, கோவைப் புதூரில் உள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரியில் நடிகை பிரியா வாரியார் போல் மாணவிகள் யாராவது கண்ணடித்தால் ஒரு வருடம் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டு உள்ளதாக சமூக வலை தளங்களில் தகவல் பரவி வருகிறது.

எனினும் இதனை மறுத்துள்ள கல்லூரி நிர்வாகம், எங்கள் கல்லூரி லெட்டர் பேடை தவறாக பயன்படுத்தி இவ்வாறு வலை தளங்களில் வதந்தி பரப்பி வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்