Categories: சினிமா

‘மணிக்கய மலரய பூவே’ மத நம்பிக்கையை இழிவுபடுத்துகிறதா..? நடிகை பிரியா வாரியர் மீதான நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை!

Published by
Dinasuvadu desk

‘ஒரு அடார் லவ்’ என்கிற மலையாளப் படத்தில் இடம்பெற்ற பாடல் தொடர்பாக நடிகை பிரியா வாரியர் மீது வழக்குப் பதியவோ, நடவடிக்கை எடுக்கவோ கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘ஒரு அடார் லவ்’ என்கிற மலையாளப் படத்தில் வரும் ‘மணிக்கய மலரய பூவே’ என்ற பாடல் அண்மையில் இணையதளத்தில் வெளியாகி பெரும் சக்கை போடு போட்டு வருகிறது. இந்த பாடல் காட்சியில் இடம்பெற்ற, நடிகை பிரியா வாரியரின் கண் அசைவுகள், முக பாவனைகள் பெரும் வரவேற்பைப் பெற்று மிகவும் பிரபலம் ஆனது. இக்காட்சியை இணையதளத்தில் சுமார் 3 கோடியே 50 லட்சம் பேர் வரை பார்த்து ரசித்துள்ளனர். ‘ஒரு அடார் லவ்’ படம் வரும் மார்ச் மாதம்தான் வெளியாகிறது என்றாலும், அதற்கு முன்பே, கண் அசைவுக்காக நடிகை பிரியா வாரியர் மிகவும் பிரபலமாகி விட்டார்.இந்நிலையில், ‘மணிக்கய மலரய பூவே’ பாடல் முஸ்லிம் சமூகத்தின் இறைத்தூதரான நபிகள் நாயகத்தையும், அவரின் மனைவி கதீஜா ஆகியோரையும் அவதூறு செய்யும் வகையில் இருப்பதாக முஸ்லிம் அமைப்புகள் குற்றம் சாட்டினர். மேலும் இது தொடர்பாக, ஹைதராபாத்தில் உள்ள பளுக்னமா காவல் நிலையம், மகாராஷ்டிராவின் அவுரங்காபாத், மும்பை காவல் நிலையம் ஆகியவற்றில் முஸ்லிம் அமைப்புகள் புகாரும் செய்துள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல், 40 ஆண்டுகளாக வடகேரளத்தில் விசேஷங்களின்போது பாடப்பட்டு வரும் ஒன்றுதான் எனும்போது, தற்போது திடீரென சர்ச்சை எப்படி வந்தது? என்று படத்தின் இயக்குநர் உமர் அப்துல் வகாப் கேள்வி எழுப்பினார்.எனினும், பிரியா வாரியர் மற்றும் இயக்குநர் உமர் அப்துல் வகாப், தயாரிப்பாளர் ஜோசப் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.அவர்கள் கைது செய்யப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகின.இதையடுத்து, நடிகை பிரியா வாரியரும், இயக்குநர் உமரும், போலீசார் தங்கள் மீது பதிவு செய்துள்ள வழக்கை ரத்துசெய்ய கோரியும் போலீசாருக்கு உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

மேலும் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.அதனடிப்படையில்,உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, டி.ஒய். சந்திர சூட், ஏ.எம். கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, புதன்கிழமையன்று இம்மனுவை விசாரித்தது. அப்போது, பிரியா வாரியர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிஸ் பீரன், “மணிக்கய மலரய பூவே.. பாடல் யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எடுக்கப்பட்டதல்ல; பிரியா வாரியரின் பெயருக்குக் களங்கம் விளைவிப்பதற்காக வேண்டுமென்றே புகார் அளிக்கப்பட்டுள்ளது; எனவே, அதற்குத் தடை விதிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். உச்ச நீதிமன்றமும் அதை ஏற்றுக்கொண்டது. இதுதொடர்பாக நீதிபதிகள் தங்கள் உத்தரவில், “மணிக்கய மலரய பூவே.. பாடலுக்காக, நடிகை பிரியா வாரியர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு தடைவிதிக்கப்படுகிறது; மத உணர்வுகளை புண்படுத்திவிட்டதாகக் கூறி புதிதாகவும் அவர்கள் மீது எந்தவிதமான முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யக்கூடாது” என ஆணையிட்டனர்.அத்துடன் பிரியா வாரியர் மீதான வழக்கு தொடர்பாக, பதிலளிக்குமாறு மகாராஷ்ட்டிரா, தெலுங்கானா அரசுகளுக்கும் உத்தரவிட்டனர்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

4 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

5 hours ago