நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ள நிலையில், தனது ஆன்மிக குருக்களிடம் ஆசி பெறவும், பாபாவை வழிபடவும் இமயமலைக்கு சென்றார். தனது ஆன்மிக சுற்றப் பயணத்தை முடித்து கொண்டு இன்று மாலை சென்னை திரும்புகிறார். கட்சி பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை அவர் முடிவு செய்து விட்டு வந்திருப்பதாக கூறுகிறார்கள்.மாவட்ட வாரியாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.
சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு வருகிற 5 நாட்களுக்கு நடக்கிறது. இது முடிந்த பிறகு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் ரஜினி விரைவில் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.அதன் பிறகு திட்டமிட்டமிட்டபடி இம்மாத இறுதியில் உடல் பரிசோனைக்காக அமெரிக்கா செல்கிறார். எம்.ஜி.ஆர் அமெரிக்க சிகிச்சை முடிந்து திரும்பியபோது மக்கள் கொடுத்த வரவேற்பு போன்று இந்த முறை ரஜினியை வரவேற்க பெரும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று சென்னையில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கட்சி பெயர், கொடி, சின்னத்தை அறிவிப்பார் என்றும் ரஜினி மக்கள் மன்ற வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…