Categories: சினிமா

பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்!

Published by
Venu
நான் அவன் இல்லை 2, அரவான், துணை முதல்வர் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் பிரபல  மலையாள நடிகை ஸ்வேதா மேனன்  நடித்துள்ளார்.
தற்போது ஸ்வேதா மேனன், படப்பிடிப்பு ஒன்றுக்காக மும்பையில் உள்ளார். இவரது செல்போனுக்கு நேற்று சிலர் பேசியுள்ளர். தெரியாத நம்பரில் இருந்து வந்த அந்த அழைப்பில் பேசியவர்கள், மலையாள நடிகர் சங்கத் தேர்தலில் நிர்வாக குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதற்கு வாழ்த்துக்கள் கூறினர்.
தொடர்ந்து சில நிமிடங்களில் மீண்டும் செல்போன் அழைப்புகள் வந்தன. நம்பரும் பெயரும் இல்லாமல் வந்த அந்த அழைப்பை எடுத்து பேசிய ஸ்வேதா மேனனை, எதிர்முனையில் இருந்தவர்கள் ஆபாசமாக திட்டினர். அதோடு அவரை கொன்று விடுவதாகவும் மிரட்டினர். இதனைத் தொடர்ந்து ஸ்வேதா மேனன், போலீசில் புகார் செய்தார்.
மலையாள நடிகர் (அம்மா) சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர் பதவிக்கு ஸ்வேதா மேனன் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவருக்கு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இது பற்றி ஸ்வேதா மேனன் கூறும்போது, நான் நடிகர் சங்க உறுப்பினராக இருக்கிறேன். இதற்கு முன்பும் பல நடிகைகள் நிர்வாக குழு உறுப்பினர்களாக இருந்துள்ளனர். ஒவ்வொரு தேர்தலிலும் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். கீது மோகன்தாஸ், காவ்யா மாதவன், ரம்யா உட்பட பலர் இருந்துள்ளனர். இதையடுத்து நானும் போட்டியிடுகிறேன். மிரட்டல் குறித்து கவலையில்லை என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

6 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

12 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

12 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

12 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

12 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

12 hours ago