பாலியல் தொல்லை விவகாரம்…!ரகுல் உங்கள் பல்லை உடைத்து கையில் கொடுப்பேன் …!ஸ்ரீ லீக்ஸ் நடிகை ஆவேசம் …!

Published by
Venu

கடந்த ஒருவாரமாக  ஒரு சில இயக்குனர்கள், நடிகர்கள் மீது டோலிவுட் நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் தொல்லை புகார் கூறி வருகிறார். இயக்குனர் சேகர் கம்முலா மீது அவர் புகார் கூறியபோது அதற்கு அவர் பதிலடி தரும் வகையில், ‘என் மீது புகார் கூறினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’ என்றார்.

Related image

அதற்கு பதில் அளித்த ஸ்ரீரெட்டி, ‘சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள தயார். என்னிடம் ஆதாரம் உள்ளது’ என்றார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் ‘நான் ஈ’ நடிகர் ஒருவரைப்பற்றி புகார் கூறினார் ஸ்ரீரெட்டி.

இந்நிலையில் தெலங்கானா முதல்வரை நேரில் சந்தித்து புகார் கூற அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் பொது இடத்தில் நிர்வாண போராட்டம் நடத்துவேன் என்றார். திடீரென்று நேற்று மதியம் ஐதராபாத் பிலிம் சேம்பர் அலுவலகம் எதிரே வந்தவர் திடீரென்று தனது ஆடைகளை ஒவ்வொன்றாக கழற்ற தொடங்கினார். 80 சதவீதம் ஆடைகளை களைந்தநிலையில் அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பிறகு ஸ்ரீரெட்டி கூறும்போது,’எனக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றி கடந்த 1 மாதமாக நான் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறேன். அதுபற்றி பிலிம்சேம்பர் கண்டுகொள்ளவில்லை. பலர் எங்களை பயன்படுத்திக்கொள்கிறார்கள். அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது என்றபோதும் திரையுலகில் உள்ள மூத்த கலைஞர்கள் பேச மறுக்கிறார்கள். கடந்த பத்து, பதினைந்து வருடமாக இந்தி திரையுலகிலிருந்து தான் டோலிவுட் படங்களுக்கு நடிகர், நடிகைகளை ஒப்பந்தம் செய்கிறார்கள்.

துணை நடிகைகள், அம்மா கதாபாத்திரங்களுக்கும் அவர்களைத் தான் அழைக்கிறார்கள். திறமைக்கு மதிப்பு கொடுப்பதில்லை. படங்களுக்கு நடிகைகளை சேர்த்துவிடும் காஸ்டிங் கவுச் பற்றி தெரியாது. அதுபோன்ற அனுபவம் தனக்கு இல்லை என்று ரகுல் ப்ரீத் சிங் கூறுகிறார். ரகுல் போன்றவர்கள் கோடிக்கணக்கில் சம்பளம்பெறும்போது காஸ்டிங் கவுச் பற்றி அவர்கள் எப்படி பேசுவார்கள். ஜிம் வைத்திருக்கிறார், வியாபாரத்தில் முதலீடு செய்கிறார், மும்பையில் பங்களாக்கள் வாங்குகிறார்.


அப்படியிருக்கும்போது எங்களைப்போன்றவர்களின் வலியை அவரால் எப்படி உணர முடியும். ஆடம்பர கார்களுடன் பாலிவுட் நடிகைகள் இங்கு வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ரகுலுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். எங்களைப்போன்றவர்களின் போராட்டம்பற்றி தரக்குறைவாக பேசினால் அவரது பல்லை உடைத்து கையில் கொடுப்பேன். இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…

26 mins ago

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…

1 hour ago

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

2 hours ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

3 hours ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

4 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

4 hours ago