பள்ளிபருவத்திலே அழகிப் போட்டிக்கான வாய்ப்பை பெற்ற பிரபல நடிகை !

Published by
Dinasuvadu desk
பிரபலமான நடிகைகளின் வளர்ச்சியை ஆராய்ந்து பார்த்தால், அவர்கள் பள்ளிப் பருவத்தில் இருந்தே அதற்கான அடிப்படை தகுதிகளை வளர்த்து வந்திருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. இந்தி திரை உலக பிரபலம் பிபாஷா பாசுவுக்கு அழகிப் போட்டிக்கான வாய்ப்பு 16 வயதிலே கிடைத்திருக்கிறது. பள்ளிப்பருவத்திலே அதை பயன் படுத்திக்கொண்டு அவர் எப்படி எல்லாம் வளர்ந்து, திரை உலகில் நிலையான இடத்தை பிடித்தார் என்பதை மனந்திறந்து சொல்கிறார்:
‘‘நான் 12-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது ஒரு நட்சத்திர ஓட்டலுக்குச் சென்றிருந்தேன். அப்போது அழகிப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. ஒருவர் என்னை அணுகி, சூப்பர் மாடல் போட்டிக்கான ஆரம்பசுற்றுப் போட்டிகள் நடக்க இருக்கின்றன. அதில் நீங்கள் கலந்து கொள்ள விரும்புகிறீர்களா? என்று கேட்டார். நான் ஒரு சயின்ஸ் குரூப் மாணவி, மாடலிங் பற்றியெல்லாம் எதுவும் தெரியாது. ஆனால் அவர்கள், கொல்கத்தாவில் இருந்து 100 பெண்களை தேர்வு செய்யப்போவதாகவும், நான் ஒரு படிவத்தை நிரப்பிக்கொடுத்தால் போதும் என்றும் வற்புறுத்தினார்கள். நானும் கலந்துகொள்ள சம்மதித்து இடம்பெற்றேன்.
சில நாட்களிலேயே அந்த 100 பேர் பட்டியல், 17 பேராகக் குறைக்கப்பட்டது. நான் ஆச்சரியப்படும்விதமாக, அந்தப் பட்டியலில் என் பெயரும் இடம்பெற்றிருந்தது. ஒரு விருந்தும், அதைத் தொடர்ந்து இறுதிச்சுற்றுப் போட்டியும் நடக்கும் என்று அறிவித்தார்கள். நான் ஒரு பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொள்ளப் போவதாக வீட்டில் பொய் சொல்லிவிட்டு போட்டியில் கலந்துகொண்டேன். இறுதிச்சுற்றில் என்னிடம் ஏதோ சில கேள்விகள் கேட்டார்கள், நானும் வாய்க்கு வந்ததைச் சொன்னேன். வீடு திரும்பிய நான், அப்படியே அந்தச் சம்பவத்தை மறந்துவிட்டேன்.
ஆனால் மறு வாரம் எங்கள் வீட்டுக்கு போன் செய்த சூப்பர் மாடல் மெகர் ஜெசியா, சூப்பர் மாடல் போட்டிக்கு கொல்கத்தாவில் இருந்து 3 பெண்களில் ஒருவராக நானும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். அத்துடன் அவர் என்னிடம் செல்லக் கோபமாக, ‘ஏம்மா… எங்களிடம்கூடச் சொல்லாமல் போட்டியில் கலந்துக்கிட்டிருக்கியே?’ என்றார். அதற்கு நான், விடுமுறை நாளாக இருந்ததால் சும்மா ஒரு ஜாலிக்காக அதில் கலந்துகொண்டதாகக் கூறினேன்.
Published by
Dinasuvadu desk

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

3 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

11 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

23 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago