பத்மாவதி படத்தை நிபந்தனைகளுடன் வெளியிடலாம் : தணிக்கை குழு அறிவிப்பு
ஒரு படம் தயாராகி இந்தியாவில் இந்தியாவில் வெளியாவதற்குள் தயாரிப்பாளரின் உசுரே போய்விடும் அளவுக்கு தணிக்கை ஒரு பாடு படுத்திவிடுகிறது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சாகித் கபூர் ஆகியோர் நடித்திருக்கும் படம் பத்மாவதி.
இந்த படம் எப்போ ரிலீஸ் தேதி அறிவித்தார்களோ அப்போதே ஆரம்பித்தது இந்த பிரச்சனை படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சில மாநிலங்களில் இப்படம் வெளியாக தடை எனவும், இன்னும் சிலர் படத்தில் நடித்தவர்களின் தலையை வெட்டி கொண்டு வருமாறும் கூறினர்.
தற்போது தணிக்கை குழு அந்த படத்தை சில கண்டிசன்கள் விதித்து அதனை வெளியிடலாம் என அறிவித்துள்ளது. பத்மாவதி என்ற தலைப்பை பத்மாவத் என்றும், மேலும் 20-க்கும் மேற்பட்ட கட்களை சொல்லி அதனை எடுத்தால் படத்தை வெளியிடலாம் என தணிக்கை குழு அறிவித்துள்ளது.
source : dinasuvadu.com