பண தேவையால் தான் அந்த படங்களில் நடித்தேன் -ராதிகா ஆப்தே..!

Default Image

ராதிகா ஆப்தே சமீபத்தில் தென்னிந்திய நடிகர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். படப்பிடிப்பில் தனது காலை அந்த நடிகர் உரசி தொல்லை கொடுத்ததாக அவர் கூறியிருந்தார்.

இந்தி படங்களில் கவர்ச்சி காட்சிகளில் துணிச்சலாக நடித்து வருகிறார். அவரது ஆபாச படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்த நிலையில் ராதிகா ஆப்தே அளித்த பேட்டி வருமாறு:-

“சினிமா துறையில் பின்புலம் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் எளிதாக கிடைத்து விடுகின்றன. உறவினர்கள் இல்லாதவர்கள் கஷ்டப்பட வேண்டி உள்ளது.

பட வாய்ப்புக்கு அவர்கள் போராடும் நிலை இருக்கிறது. பின்புலம் உள்ளவர்கள் உறவினர்கள் உதவியால் வாய்ப்புகள் பெற்றாலும் திறமை இருந்தால்தான் அவர்களால் நிலைக்க முடியும்.

நான் எந்த பின்னணியும் இல்லாமல்தான் சினிமாவுக்கு வந்தேன். நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டேன். அதை என்னால் தவிர்க்க முடியவில்லை. சினிமா துறைக்கு வந்தபோது எந்த மாதிரி கதைகளில் நடிக்க கூடாது என்று நினைத்து இருந்தேனோ அந்த படங்களில்தான் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

என் பிழைப்புக்கு தேவையான பணத்துக்காக அதுபோன்ற மோசமான படங்களை என்னால் தவிர்க்க முடியாமல் போய் விட்டது. இப்போது எனக்கு பெயர் புகழ் கிடைத்து விட்டது. நிறைய பட வாய்ப்புகளும் வருகின்றன. இதனால் எல்லா கதைகளுக்கும் ஒப்புக்கொள்ளாமல் எனக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன்.”

இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்