நிலச்சரிவில் சிக்கி கொண்ட நடிகர்..!! 18 மணி நேரம் போராட்டம் கொடுரமானது..!வீடியோவில் உருக்கம்..!!

Default Image

கேரளாவில் ஒருவாரத்துக்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழை மற்றும் நிலச்சரிவால் மாநிலம் முழுவதும் நிலைகுலைந்துள்ளது. மாநிலம் முழுவதையும் புரட்டி போட்டிருக்கும் கேரள மழை வெள்ளம் அங்கு வசிக்கும் பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. அப்படி நிலச்சரிவில் தனது குடும்பத்தினருடன் சிக்கி அதிலிருந்து மீண்ட நடிகர் ஜெயராம் தனது அனுபவத்தை ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
Related image
கேரள பேரழிவில் சிக்கிய  குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. சென்னையிலிருந்து குடும்பத்துடன் கார் மூலம் கேரளாவுக்கு வந்து கொண்டிருந்தேன். அப்போது வரும் வழியில் குதிரன் என்ற  எங்களது வாகனம் நின்றிருந்தது. அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிக் கொண்டோம்.  18 மணிநேரம் நிலச்சரிவில் சிக்கித்தவித்தது கொடூரமானது. பல அவஸ்தைகளுக்கு மத்தியில் போலீசார் எங்களை மீட்டு 3 நாட்கள் போலீசாரின் குவாட்டர்ஸில்  தங்க வைத்தனர் இந்த நேரத்தில் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

லட்சக்கணக்கான உயிருக்காக போராடும் சமூகத்தில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி.இப்போது முகாம்களில் உள்ளவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்கிறோம். சென்னையிலிருந்து சில நண்பர்கள் நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கிறார்கள்.மேலும் பேசிய அவர் குழந்தைகளுக்கு தேவைப்படும் உணவுகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் நிலைமை இவ்வாறு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.”இங்கு நீர் இல்லை. குழந்தைகளுக்கு உணவு தேவை. நாப்கின் உள்ளிட்ட பொருட்களை அனுப்பி உதவி செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.

 
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்