நான் லெஸ்பியன் அல்ல…MeToo நடிகை பரபரப்பு பேச்சு…!!

Default Image
நான் போதை அடிமை அல்ல, லெஸ்பியனும் அல்ல என கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்துக்கு நடிகை தனுஸ்ரீ தத்தா பதிலடி கொடுத்துள்ளார்.
பத்திரிக்கை துறை, சினிமா துறை என பாகுபாடு இல்லாமல் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் நிகழ்ந்து வருகிறது. இதை மாற்றவே பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு குறித்து #Metoo மூலம் பேசி வருகின்றனர்.
தனுஸ்ரீ தத்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பிரபல நடிகர் நானா படேகர் 10 ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பு ஒன்றில் பாலியல் ரீதியாக தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினார்.இது இந்தி திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த புகாருக்கு நானா படேகர் மறுப்பு தெரிவித்தார். மேலும் தனது வக்கீல் மூலம் தன்னை பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நடிகைக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த பரபரப்பான நிலையில்  நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா மும்பை போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த  சம்பவத்தில்  பல நடிகர்-நடிகைகள் அவருக்கு  ஆதரவு அளித்தனர். ஆனால் அந்த படத்தில் அந்த பாடலில்  தனுஸ்ரீக்கு பதில் நடித்த நடிகை ராக்கி சாவந்த் தனுஸ்ரீ தத்தா ஒரு பொய்யர் என கூறினார். மேலும் அவர் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இது தொடர்பாக  ராக்கி சாவந்து எதிராக  ரூ 10 கோடி  கேட்டு ஒரு அவதூறு வழக்கை  தனுஸ்ரீ தத்தா தொடர்ந்து உள்ளார்.இந்த நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள ராக்கி சாவந்த் ரூ. 50 கோடி கேட்டு வழக்கு தொடரப் போவதாக தனுஸ்ரீ தத்தாவுக்கு இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம்  மிரட்டல் விடுத்து இருந்தார்.
கவர்ச்சி நடிகை ராக்கி ஷாவந்த் சீ டூ  என்ற ஒரு இயக்கத்தை தொடங்கி உள்ளார்.  இது குறித்து அவர் பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:-
தனுஸ்ரீ தத்தா ஒரு லெஸ்பியன்.  அதை  அவரே என்னிடம் தெரிவித்தார்.  அவர் ஒரு போதை அடிமை. ஒரு முறை அவர் என்னை ரேவ் பார்ட்டிக்கு அழைத்தார்.  அங்கு அவர் என்னுடன் லெஸ்பியன் உறவு கொள்ள முயன்றார்.  அவர் மட்டுமல்ல அவரது தோழிகளும் என்னை லெஸ்பியன் உறவுக்கு அழைத்தார்கள்.  இப்படிப்பட்ட  தனுஸ்ரீதத்தா  என் மீது வழக்கு போட்டு உள்ளார் என கூறினார்.
இது குறித்து பதில் அளித்துள்ள தனுஸ்ரீ தத்தா கூறி உள்ளதாவது:-
கொரில்லா போர் தந்திரோபாயங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஸ்மியர் பிரச்சாரங்கள் ஒருபோதும் நியாயமாக இருக்காது. எனவே பதிவு நேராக இருக்க வேண்டும்    நான் ஒரு போதை மருந்து அடிமையாக இல்லை, நான் புகைபிடிப்பதில்லை அல்லது குடிக்க மாட்டேன், லெஸ்பியன் அல்ல. எனவே  என்னை வக்கிரமாக சித்தரித்து  என் வாயை மூடு முயற்சிக்கிறது !! இது தெளிவாக வேலை செய்யவில்லை. நமது சமுதாயத்தில்  நல்ல மாற்றங்களை கொண்டு வரும். இத்தகைய தீவிர இயக்கத்தில் நகைச்சுவையை உருவாக்காதே என கூறி உள்ளார்.
dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்