நான் பார்த்த எல்லா வேலைகளுமே எனக்கு திருப்தி தந்தவை தான்: நடிகை பகீர் ஒப்புதல்..!

Default Image
பிரியா பவானி சங்கர்,  இந்தியத் திரைப்பட நடிகையும் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார். கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்தமைக்காக மிகப் பிரபலமாக அறியப்பட்டவர். பின்பு சின்னத்திரை விட்டு வெள்ளித்திரைக்கு வந்து மேயாத மான் படத்தைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார்.
Image result for பிரியா பவானி சங்கர்அவர் அளித்த பேட்டியில், நான் பார்த்த எல்லா வேலைகளுமே எனக்கு திருப்தி தந்தவை தான். கல்யாணம் முதல் காதல் வரை  எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்தமைக்காக எனக்கு நல்ல வரவேற்பு இருந்தது. என்னை பொறுத்தவரை எல்லாமே ஒன்று தான். இது பெரியது, இது சிறியது என்று பார்ப்பதில்லை.
மேலும் என்னைப் பற்றி வரும் செய்திகள் எல்லாமே வதந்தி தான். நான் திருட்டு கல்யாணம் பண்ணிக்கொள்ள மாட்டேன்.நான் காதலிப்பதாக பல செய்திகள் வந்துள்ளது. திருமணம் செய்வதாக இருந்தால் ஊரை கூட்டி சந்தோ‌ஷமாக செய்துகொள்வேன். சீரியலில் நடிப்பதை நிறுத்தியபோது நான் திருமணத்துக்காக தான் நிறுத்தியதாக நினைத்துக் கொண்டார்கள் போல. நான் இதற்கு எல்லாம் விளக்கம் தருவதில்லை. எனவே செய்தி பரவி விட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்