நடிகர் ரஜினி மீதான அவதூறு வழக்கு ரத்து..!!உயர்நீதிமன்றம் உத்தரவு..!

Default Image

நடிகர் ரஜினிகாந்த் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 
நடிகர் தனுஷின் தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா மீதான செக் மோசடி வழக்கில் நடிகர் ரஜினிகாந்த்தையும் சினிமா பைனான்சியர் போத்ரா எதிர்மனுதாரராக சேர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
அதில் பணம் பறிப்பதற்காக என் மீது போத்ரா வழக்கு தொடர்ந்ததாக நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக அவர் மீது போத்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இதனிடையே இந்த வழக்கை ரத்து செய்ய கோரி நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் நெடு நாட்களாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கை நிராகரிக்க கோரிய ரஜினி தன் மனுவில் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் அவர் மீது அவதூறு வழக்கு தொடர முடியாது என்று நடிகர் ரஜினி தரப்பில் வாதாடப்பட்டது.இந்நிலையில் நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி நடிகர் ரஜினி மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்