நடிகர் பிரகாஷ்ராஜ் மீது கிரிமினல் வழக்கு …!பெங்களூரு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு …!
நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.
நடிகர் பிரகாஷ்ராஜ் இந்தியாவின் 2 தேசிய விருது பெற்ற திரைப்பட நடிகர்ஆவார். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது காஞ்சிவரம் தமிழ் திரைப்படத்துக்காக 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார்.அத்துடன் இவர் இருவர் தமிழ்த் திரைப்படத்துக்காக 1998 ஆம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகர் விருதையும் பெற்றிருக்கிறார்.மேலும் கில்லி படத்தின் மூலம் மிகவும் பிரபலம் ஆனார்.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. பெங்களூரு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கிரண் என்பவர் இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக பேசியதாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது மனு தாக்கல் செய்துள்ளார். பிரகாஷ்ராஜ் மீது கிரிமினல் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
DINASUVADU