அங்காடி தெரு, அரவான், காவிய தலைவன் படங்களையடுத்து ஜெயில் படத்தை இயக்கி வருகிறார் வசந்தபாலன். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்து ஹீரோவாக நடிக்கிறார். அபர்ணதி ஹீரோயின். ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிக்கிறார். ஆக்ஷன், காமெடி, காதல் கலந்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் உள்ள கண்ணகி நகரில் நடந்தது. இப்பகுதியில் அடிக்கடி மோதல்கள் நடப்பது சகஜம். படப்பிடிப்பு நடந்த சமயத்தில் அதை வேடிக்கை பார்க்க கூட்டம் கூடியது.
பிரகாஷ், அபர்ணதி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. திடீரென்று சிலர் அரிவாள், உருட்டு கட்டைகளுடன் ஒருவரை ஒருவர் துரத்தி தாக்க தொடங்கினர். இதனால் படக்குழுவினரிடையே பதற்றம் ஏற்பட்டது. படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ஜி.வி.பிரகாஷையும் அபர்ணதியையும் அழைத்துச் சென்று அங்கிருக்கும் ஒரு வீட்டில் பத்திரமாக தங்க வைத்தனர். அடிதடி, தகராறு ஓய்ந்து 2 மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது.
DINASUVADU
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…