நடிகர் அஜித் செய்த அபூர்வ செயல்! ஆச்சர்யத்தின் உச்சம்!!

Default Image

நடிகர் அஜித் சினிமாவில் ஸ்கீரின் மூலமே முகத்தை காட்டி மொத்த ரசிகர்களையும் ஈர்த்தவர். தனி விளம்பரமோ, மக்கள் மன்றமோ வேண்டாம் என ஒதுங்கியிருப்பவர்.

ஒவ்வொரு நாளையும் பரபரப்பாக்கும் சமூக வலைதளங்கள் கூட வேண்டாம் நிம்மதியே போதும் என இருக்கிறார். ஆனால் அவரை வைத்து ரசிகர்கள் மிகவும் கொண்டாடுவார்கள்.

ஒரு முறை அஜித் தனது மேலாளருக்கு போன் கால் செய்திருக்கிறார். அப்போது வேறு ஒரு நபர் போனை எடுத்து பேசி, உங்கள் மேனேஜரின் மாமனார் இறந்துவிட்டார் என சொல்லியிருக்கிறார்.

உடனே அஜித் அவரிடம் முகவரியை வாங்கி இரவில் தானெ காரில் அந்த ஏரியாவுக்கு சென்றாராம். ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு டீக்கடை இளைஞரிடம் வழி கேட்டிருக்கிறார்.

ஆனால் அவருக்கு நேரில் அஜித்தை பார்த்து அதிர்ச்சி. துக்கம் நடந்த இடத்திற்கு சென்ற அஜித் திரும்பு வரும் போது அங்கிருந்த ஒருவரை வேறு காரில் தன்னுடன் அழைத்து வந்திருக்கிறார்.

மறுபடியும் அதே டீக்கடைக்கு சென்று அந்த இளைஞரிடம் தானே பணத்தை கொடுத்து துக்கவீட்டில் எல்லோருக்கு டீ கொடுங்கள். உங்களை இவர் அழைத்து சென்று மீண்டும் கடையில் இறக்கி விடுவார் என சொல்லிவிட்டு அஜித் போய்விட்டாராம். இது அந்த கடைக்காரருக்கும், உடன் வந்த துக்க வீட்டுக்காரருக்கும் பெரும் இன்பதிர்ச்சியாக இருந்ததாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்