திரைப்படங்கள் வெளிவருமா? வெளிவராதா?விஷால் இன்று முக்கிய அறிவிப்பு !

Default Image

திரைப்படத் துறையினரின் வேலைநிறுத்தம் , சென்னையில் அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, முடிவுக்கு வந்துள்ளது.

திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் திரைப்படம் வெளியிடுவதற்காக கியூப் நிறுவனம் வசூலிக்கும் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி திரைப்பட தயாரிப்பாளர்கள் படங்களை வெளியிடாமல் 42 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் கடம்பூர்ராஜு, கே.சி.வீரமணி முன்னிலையில் நேற்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், டிஜிட்டல் சேவை வழங்கும் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். எட்டு மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, சுமுக முடிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய விஷால், படங்களை எப்போது வெளியிடுவது என்பது குறித்து இன்று ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்