நடிகர் அருண்விஜய் காவிரி விவகாரம் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் நடிகர் அருண்விஜய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடே போராட்டக்களத்தில் கொந்தளித்துக்கொண்டிருக்கும் வேளையில், நம் மீது அலட்சியம் ஏன்? நாம் யாரிடமும் கையேந்த வேண்டிய அவசியம் இல்லை! நாம் நம் உரிமையைக் கேட்கிறோம். அதை பெற்றுத்தருவது அவர்களின் கடமை. நம் இந்திய நாட்டிலேயே அதிகமாக வரி செலுத்தும் மாநிலங்களில் ஒன்று தமிழகம் என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். உடனடி தீர்வு அவசியம். வந்தாரை வாழவைக்கும் நம் தமிழ்நாடு, இன்று அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. அதை காக்க வேண்டியது தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொருவரின் கடமை” என நடிகர் அருண்விஜய் பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…