நடிகை சமீரா ரெட்டி சிறந்த இந்திய நடிகை ஆவார். இவர் தமிழில் சூர்யாக்கு ஜோடியாக வாரணம் ஆயிரம் படத்தில் அறிமுகமானவர். இவர், இந்தி, தெலுங்கு, கன்னட மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், கடத்த 2014-ம் ஆண்டு தொழில் அதிபர் அக்ஷய் வர்தேவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு இவர் சினிமாவில் நடிப்பதை விட்டு விட்டார். சமீராவுக்கு ஹான்ஸ் என்ற மகன் இருக்கிறார். தற்போது 2வது முறையாக கர்ப்பமாகி இருக்கிறார்.
இவர் கர்ப்பமாய் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து பலருமகிந்தால் செய்துள்ளனர்.
இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது, நடிப்பிலிருந்து விலகி திருமணம் செய்துகொண்டபின் கர்ப்பம் அடைந்த சமயம் எனது உடல் எடை கூடியது. எனது தோற்றத்தை கண்டு கமென்ட் செய்தனர்.
இது குறித்து அவர் பேசுகையில், “உடல் அமைப்பைக் கொண்டு கிண்டல் செய்பவர்களைப் பார்த்து கேட்க விரும்புகிறேன். நீங்கள் உங்கள் அம்மாவின் உடல் வழியாகத் தானே வந்தீர்கள், உங்களைப் பெற்றபின் உங்களது அம்மாவின் கவர்ச்சி குறைந்துவிட்டதா என்று அவரிடமே கேளுங்கள்” என்று கிண்டல் செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…