செல்பிக்கு பயந்து பாடிகார்டுடன் வலம்வரும் நடிகைகள்..!
அபிமான நடிகர்-நடிகைகளுடன் செல்பி எடுப்பதில் ரசிகர்களுக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு. பட விழாக்கள், கடை திறப்பு நிகழ்ச்சிக்கு வரும் நட்சத்திரங்களுடன் சேர்ந்து நின்று செல்பி எடுக்கின்றனர்.
விமான நிலையங்களிலும் நடிகர்-நடிகைகளை முற்றுகையிட்டு செல்பி எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் நடிகர்-நடிகைகளுக்கு அசவுகரியங்கள் ஏற்படுகின்றன.
சிலர் அத்துமீறி உடம்பை தொடுவதும் கையை பிடித்து இழுக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. இதை தவிர்ப்பதற்காக நடிகைகள் பலர் இப்போது பாதுகாப்புக்கு தனியாக பாதுகாவலர்களை சம்பளம் கொடுத்து வைத்துள்ளனர்.படப்பிடிப்பு நடக்கும் இடங்கள், விமான நிலையங்களில் இவர்கள் பாதுகாப்பு அளிக்கின்றனர்.