Categories: சினிமா

சூர்யா நடிக்கும் படத்தில் பிரதமராக மோகன்லால்..!!

Published by
Dinasuvadu desk
செல்வராகவன் இயக்கிய ‘என்.ஜி.கே’ படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். இப்போது கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே அயன், மாற்றான் படங்கள் வெளிவந்தன.கே.வி.ஆனந்த் இயக்கும் படத்துக்கு இன்னும் பெயர் வைக்காமலேயே படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதில் சூர்யாவுடன் மோகன்லால், ஆர்யா, சிராஜ் ஜானி, சாயிஷா, சமுத்திரக்கனி  ஆகியோரும் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்களை அறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டினார்கள். இந்த நிலையில் மோகன்லால் பிரதமராக நடிப்பதாகவும் அவருக்கு பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா வருகிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

மோகன்லால் பிரதமர் தோற்றத்தில் இருப்பதுபோன்ற படமும் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்தி வாசகங்களுடன் மோகன்லால் பிரதமர் வேடத்தில் இருக்கும் பேனர் மற்றும் அதன் அருகில் சூர்யா கோட் சூட்டில் மிடுக்காக நடந்து செல்வது போன்ற இன்னொரு படமும் வெளியாகி இருக்கிறது.
பிரதமருக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை சூர்யா முறியடிப்பது போன்று திரைக்கதை அமைத்து இருப்பதாக கூறுகின்றனர். ஆனாலும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. அரசியல் திகில் படமாக தயாராகிறது. இது சூர்யாவுக்கு 37–வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU

Published by
Dinasuvadu desk

Recent Posts

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

5 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

16 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

20 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

21 hours ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

21 hours ago

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…

21 hours ago