சிவகர்த்திகேயன் படபிடிப்பு முதல் நாளே நிறுத்தப்பட்டது : கோலிவுட் கட்டபஞ்சயத்து

Default Image

நடிகர் சிவகர்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள படம் வேலைக்காரன். இப்படம் சிவா நடிப்பில் வெளியாகி அவரது படங்களிலேயே பெரிய வசூலை வாரி குவித்துள்ளது.
மேலும் இப்படத்தை பற்றி நடந்த சம்பவங்களை பற்றியும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறும்போது, ‘சினிமாவில் ரெட் கார்டு கலாச்சாரம் பற்றி தெரியவில்லை. ஒரு படத்தின் படபிடிப்பை நிறுத்துவதால் எப்படி பிரச்சனை சரியாகும் என தெரியவில்லை. வேலைக்காரன் படபிடிப்பு முதல் நாளன்று நிறுத்தப்பட்டது. அன்று இரவு சில தயாரிப்பாளர்கள் முன்னிலையில் கட்டபஞ்சாயத்து நடந்தது. அப்போது நான் படம் பண்ணுகிறேன் என கூறிய கம்பெனிகளுக்கு படம் செய்ய சொன்னார்கள், மேலும் நான் படம் செய்வதாக கூறாத இரு தயாரிப்பாளர்களும் எங்களுக்கும் படம் செய்து தர வேண்டும் என கூறி வாதம் செய்தனர்.’ இவ்வாறு அவர் கூறினார்.
அந்த தயாரிப்பாளர்கள் யார் என்பதை கடைசி வரை அவர் சொல்லவில்லை.
source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்