சிறையில் அடைபட்ட பிரபல தமிழ் நடிகர்..!!
குற்றவாளிகள் அறையில் தன்னை அடைத்து வைத்த அதிர்ச்சி சம்பவம்பற்றி இயக்குனர் கே.பாக்யராஜ் கூறினார். நேதாஜி பிரபு தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படம் ‘ஔடதம்’. சமீரா ஹீரோயின். ரமணி இயக்குகிறார். தமிழில் கையெழுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி பட குழு சார்பில் 10 அடி உயர பேனா வெளியிடப்பட்டது. அதை வெளியிட்டு பாக்யராஜ் பேசியதாவது: ஔடதம் என்றால் மருந்து. மருந்தில் எவ்வளவு கலப்படம் செய்கிறார்கள். எந்ெதந்த மருந்தால் உடலுக்கு தீங்கு விளையும் என்பதை பற்றி இப்படம் பேசுகிறது. தமிழில் கையெழுத்திட வேண்டும் என்று கூறுகிறார்கள். அதனால் எந்த பயனும் விளையாது என்பது என் கருத்து. தமிழில் கையெழுத்திட்டால்தான் பொருளாதார ரீதியாக உயர முடியும் என்று அரசாங்கம் சட்டம் இயற்றினால்தான் பலன் கிடைக்கும்.
சீனா, பிரான்ஸ் நாடுகளில் அவர்களின் தாய்மொழியில்தான் எல்லா நடைமுறைகளும் உள்ளது. அதனால்தான் பொருளாதார ரீதியில் அந்நாடுகள் செழிப்பான நாடுகளாக உள்ளன. அங்கெல்லாம்போய் ஆங்கிலத்தில் பேசினால் யாரும் கண்டுகொள்வதில்லை. படப்பிடிப்புக்காக சமீபத்தில் கம்போடியா செல்வதற்காக பாங்காக் சென்றேன். அங்கிருந்து வேறு விமானத்தில் கம்போடியா செல்ல டிக்கெட் எடுத்திருந்தேன். ஆனால் பாங்காக் விமான நிலைய அதிகாரிகள் என்னை செல்ல அனுமதிக்கவில்லை. ஆங்கிலத்தில் நான் விளக்கம் அளித்தும் ஏற்கவில்லை. என்னை குற்றவாளிகள் அடைத்து வைக்கும் அறையில் அடைத்து வைத்தார்கள். கடைசிவரை என்னை கம்போடியா செல்ல அனுமதிக்காமல் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பி விட்டார்கள். இவ்வாறு கே.பாக்யராஜ் பேசினார்.
DINASUVADU