சர்வதேச அளவில் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு விருது..!!மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!
நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியான படம் மகாநதி இப்படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது தமிழிலும், தெலுங்கிலும் மற்றும் வெளிநாடுகளில் நல்ல வசூலையும் தேடி தந்தது.
இப்படத்திற்கு பின் நடிகை கீர்த்தி சுரேஷை பாரட்டதவர்கள் திரையுலகில் இல்லை அந்த அளவிற்கு அனைத்து தரப்பிலும் நல்ல பெயரை அவருக்கு தேடித்தந்தது.
இப்படம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் தற்போது நடைபெறும் இந்தியன் சினிமா விழாவில் திரையிடப்பட்டது.இதனையடுத்து இந்த படத்திற்கு ஈகுவாலிட்டி ஆப் சினிமா என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இதனை அப்பட குழுவினருடன் நடிகை கீர்த்தி சுரேஷ் பெற்று கொண்டார்.நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு சர்வதேச நாட்டில் கிடைத்த முதல் அங்கீகாரம் இதுவாகும்.
DINASUVADU