சண்டைகோழி-2 படத்தில் சரத்குமார் நடித்திருந்தால் சண்டைகாட்சிகள் உண்மையாகவே நடந்திருக்கும் என விஷால் தெரிவித்தார்.
லிங்குசாமி இயக்கத்தில் விஷால், வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் மற்றும் ராஜ்கிரண் நடிப்பில் வெளியாகவுள்ள படம் சண்டைகோழி-2. இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விஷால், வரலக்ஷ்மி சரத்குமாரும், கீர்த்தி சுரேஷும், இந்த படத்துக்கு கிடைத்த இரண்டு பெரிய சொத்துக்கள் என்று பேசினார்.
இதனையடுத்து வரலக்ஷ்மியை பற்றி கூறும்போது, முதலில் வரலக்ஷிமியின் கதாபாத்திரத்தை பற்றி அவரிடம் சொன்னபோது, தன் தந்தை சரத்குமாரையே அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று யோசனை அவர் கூறியதாக விஷால் கூறினார்.
மேலும், அப்படி அந்த வில்லன் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்திருந்தால், சண்டை காட்சிகள் நிஜமாகவே இருக்கும் என்றும் என் முகத்தில் விழும் குத்துகளின் சத்தம் பல கிலோமீட்டர்கள் உண்மையாகவே கேட்கும் என்று விஷால் நகைச்சுவையாக பேசினார்.சண்டைகோழி-2 படம் வரும் அக்டோபர் 18-ம் தேதி வெளியாக உள்ளது.
DINASUVADU
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…