கையில் கட்டுடன் கேரள மக்களுக்கு அமலாபால் செய்த செயல் ..!பொதுமக்கள் நெகிழ்ச்சி
கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிபிற்கு பல்வேறு தரப்பினர்கள் உதவி வரும் நிலையில் நடிகை அமலாபாலும் மனதை நெகிழும் அளவிற்கு உதவி ஒன்றை செய்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அமலாபால் சண்டைக்காட்சியில் கையில் ஏற்பட்ட பிரச்சினையால் , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இதன் பின்னர் அவர் ஓய்விற்காக கேரளாவில் தங்கியிருந்தார்.அந்த நேரத்தில் அங்கு வெள்ளம் வந்தது.
அனைத்து தரப்பு மக்களும் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர்.ஆனால் நடிகை அமலா பாலும் உதவி செய்தார்.அதுவும் கையில் கட்டுடன் உதவி செய்தார்.
அவர் கையில் கட்டுடன் ஓடியாடி உதவி செய்வதைப் பார்த்து, கேரள மக்கள் நெகிழ்ந்துள்ளனர். அவர் களத்தில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது அதைப் பார்த்து அனைவரும் அமலா பாலின் சேவையைக் கண்டு வியந்து வருகின்றனர்.
DINASUVADU