கேரளா வெள்ள நிவாரணத்துக்கு லாரன்ஸ் ஒரு கோடி நிதி:

Default Image

அண்டை மாநிலமான கேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு பெரு வெள்ளம் ஏற்பட்டு, அந்த மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டது. மக்கள் வீடு, உடைமைகளை இழந்து முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகிறார்கள்.

தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் தாராளமாக நிதி உதவி வழங்கி வருகிறார்கள். அவர்களில் அதிகபட்சமாக நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்குவதாக அறிவித்தார். அதன்படி  தாயார் கண்மணியுடன் கேரளா சென்ற லாரன்ஸ், கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து அறிவித்தபடி, ஒரு கொடிக்கான காசோலையை வழங்கினார். நிதியை பேரருட் கொண்ட முதல்வர் ராகவா லாரன்சுக்கு நன்றி தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்