நடிகர் ரஜினிகாந்த் சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் தன்னுடைய அரசியல் பயணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் .
இதன் முதல் நகர்வாக நடிகர் ரஜினி தனது ரசிகர் மன்றங்களை, மக்கள் மன்றமாக மாற்றி அதற்கான நிர்வாகிகளையும் நியமித்தார்.அறிவித்து ஓராண்டு ஆகிய நிலையிலும் தற்போது வரை கட்சியின் பெயரை அறிவிக்கவில்லை நடிகர் ரஜினிகாந்த் ஆனால் தனது அரசியல் ரீதியான கருத்துகளை செய்தியாளர் சந்திப்புகளில் வெளிப்படுத்தி வருகிறார் .
இந்தே நிலையில் மற்றொரு உச்சநட்சத்திரமான நடிகர் கமல்ஹாசன் அரசியல் களமிரங்குகிறேன் என்று அறிவித்ததோடு மட்டுமல்லாமல் அதே வேகத்தில் மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியையும் தொடங்கி அரசியல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதில் தாமதம்காட்டி வருகிறார் என்று விமர்சனங்கள் முன்வைக்கபட்டு வரும் வேளைவில் தனது போயஸ் தோட்ட இல்லத்தில் பிரபல தனியார் செய்தி சேனலுக்கு நடிகர் ரஜினி பேட்டியளித்துள்ளார்.
அதில் பல கேள்விகள் கேட்கப்பட்டது .அதில் அரசியலில் நடிகரும் ,மநீமையத்தின் த்லைவருமான கமல் உங்களுக்கு போட்டியாளரா என்ற கேள்வி ரஜினி முன்வைக்கப்பட்டது.
கேள்விக்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த் நான் அரசியலில் கமலை எனக்கு போட்டியாளராக கருதவில்லை எனக்கு அவர் சக நடிகர் மற்றும் நல்ல நண்பர்,என்று தெரிவித்தார்.மேலும் பேசிய ரஜினி அரசியலில் நுழைந்தால் அதில் நான் நானாக இருப்பேன். அரசியலில் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.இப்பொழுது எனக்கு 67 வயதாகிறது இந்த வயதில் ஒருவர் அரசியலில் நுழைவது எளிதல்ல தற்போது தமிழகத்திற்கு தேவை நல்ல தலைமை. தலைமைக்கான வெற்றிடம் அங்கு இருக்கிறது. மக்களிடம் இருந்து வாக்குகளை மட்டும் வாங்கி கொள்வதை விட அவர்களின் தேவை எது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். மேலும் அரசியல் ஒரு ஆபத்தான விளையாட்டு என்பதாலே அதனை கவனமாக கையாள வேண்டும். இதில் நேரம் மிகவும் முக்கியம் என்று கூறியுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…