ஒரு படத்தில் இரண்டு காட்சிக்கு வந்தோம் ஏதோ நடனம் ஆடினோம் என்று நடிக்காமல் ஒரு நல்ல கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதில் உள்ள சவாலான வேடங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது தன்ஷிகா ஸ்டைல் என்றே சொல்லலாம்.
அவர் இப்போது பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகின்ற படமான யோகி டா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் கோயம்பத்தூரில் நடைபெற்றது.அந்த படப்பிடிப்பில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டது.அதில் நடிகை தன்ஷிகா டூப் போடாமால் அவரே அதில் நடித்தார்.அப்பொழுது பீர் பாட்டில்கள் வீசம் காட்சி எடுக்கப்பட்டிருந்த வேளையில் எதிர்ப்பாராத விதமாக கண்ணாடி துண்டு ஒன்று தன்சிகாவின் கண்ணிற்கு கீழ் கிழிக்க ரத்தம் கொட்டியுள்ளது.
இதனால்அதிர்ச்சியான படக்குழு உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் தனது சிகிச்சை முடித்த நடிகை தன்ஷிகா தனக்கு நடந்த விபத்து குறித்து சற்றும் யோசிக்காமல் படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துள்ளார் . பெரும்பாலும் நடிகை தன்ஷிகா தனது படத்தில் தனக்கென்று உள்ள சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் தானே நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.