ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா சென்னையில் நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்தாண்டும் இந்த விழா சென்னையில் நேற்று துவங்கியது. இதில் கலந்துகொண்ட அரவிந்த்சாமி பேசுகையில், “தற்போதுள்ள நிலையில் ஒரு படத்தை எடுப்பதை விட ஒரு முத்த காட்சிக்கு தான் அதிகம் கஷ்ட படவேண்டியுள்ளது. கிட்டத்தட்ட 2 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாட்ஸாயனா காமசூத்திரத்தைப் பற்றி எழுதி வைத்தார். பல்வேறு உள்ளடக்கங்களைக் கொண்டுள்ள இந்தப் படைப்பு பாலுணர்வு தொடர்பான ஒரு இலக்கியமாகவே இன்றும் போற்றப்படுகிறது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் ஒரு சாதாரண முத்தக்காட்சிக்கு கஷ்டப்பட வேண்டியிருக்கு. காதல் காட்சிகளை விட பெண்களுக்கு எதிரான வன்முறைக் காட்சிகள் தான் இன்றைய படங்களில் அதிகமாக காட்டப்படுகிறது” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்த விழாவினை நடத்த தமிழக அரசு எந்த நிதியுதவியும் அளிக்கவில்லை. அடுத்த ஆண்டாவது அரசு சார்பில் நிதி உதவி செய்தாக வேண்டும். அப்படியில்லை எனில், நிகழ்ச்சியை நடத்துவதே தடைபட்டு விடும் என்று திரையுலகினரின் கோரிக்கையாகவும், எதிர்பார்ப்பாகவும் இதனை முன்வைத்துள்ளனர்.
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…