எஸ்.வி.சேகர் கூறிய குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள விஷால்….!!

Default Image

 
மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திரக் கலைவிழாவில் மூத்த கலைஞர்களுக்கு தகுந்த மரியாதை அளிக்கப்படவில்லை என்று எஸ்.வி.சேகர் குற்றம் சாட்டியதற்கு நடிகர் விஷால் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளார். நடிகர் விஷால் மலேசியாவில் இருந்து நேற்று இரவு சென்னை வந்தார். அப்போது விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், “எஸ்.வி.சேகர் அறங்காவலர் பதவியை ராஜினாமா செய்ததற்கு ஒரு காரணம் சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கொள்ள முடியாது. கலை விழாவில் மூத்த கலைஞர்கள் அனைவரையும் அழைத்து உரிய மரியாதை அளிக்கப்பட்டது” என்று கூறினார். மேலும், “ரஜினி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். அப்போது எனது ஆதரவு யாருக்கு என்பதை தெரிவிப்பேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்