பாகுபலி பிரம்மாண்டத்திற்கு பிறகு சிரஞ்சீவி மகன் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இரண்டு முன்னணி தெலுங்கு நாயகர்களை கொண்டு தற்போது இயக்கி வருகிறார்.இந்த கூட்டணியின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் 19ம் தேதி தொடங்கியது.
ஆனால் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை பெயரிடப்படாத இந்தப் படம், தற்போது ஆர்.ஆர்.ஆர் என்ற தலைப்போடு இரண்டு நாயகர்கள் மற்றும் ராஜமெளலியின் பெயரில் வரும் முதல் எழுத்தைச் சேர்த்து இப்படி அழைத்து வருகின்றனர்.
மேலும் ராம ராவண ராஜ்யம் என்ற தலைப்பு இந்தப் படத்துக்குத் வைக்கப் பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படம் ராமாயணத்தை மையப்படுத்தி எடுக்கப்படுகிறததாம்.படத்தில் ராம் சரண் தான் ராமனாகவும் ஜூனியர் என்.டி.ஆர். ராவணனாகவும் நடிக்கின்றனராம் என்ற தகவல் கிடைத்துள்ளது. ஆனால், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் சமுத்திரக்கனி ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாகத் சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. எப்படி பாகுபலி படத்தில் நடித்த சத்யராஜ்க்கு கட்டப்பா கேரக்டர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அதனை போலவே இவருக்கு இது இருக்கும் என்கிறார்கள்.ராஜமௌலியின் அடுத்த படைப்பாக இருக்கும் இந்த படமானது தெலுங்கில் எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் இந்தப் படத்தை தமிழ், மலையாளம் மற்றும் இந்தியிலும் வெளியிட எஸ்.எஸ்.ராஜமெளலி திட்டமிட்டுள்ளாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…