"என்னுடைய முழு வாழ்க்கைக்கும் நடிகர் கமல் தான் காரணம்" கண்ணீருடன் பிக்பாஸ் ரித்விகா பேட்டி ..!!

Published by
Dinasuvadu desk
பிக் பாஸ் 2′-வில் வின்னர் யார் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இதன் இறுதிப்போட்டியில் ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி மற்றும் ஜனனி ஆகியோர் பங்கேற்றனர். இதில் முதலாவதாக ஜனனி வெளியேற்றப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து ’பிக் பாஸ் 1’-ன் வெற்றியாளர் ஆரவ், ’பிக் பாஸ்’ வீட்டிற்குள் வந்து விஜயலட்சுமியை அழைத்துச் சென்றார். இதன் மூலம் இறுதிப்போட்டியில் ஐஸ்வர்யா – ரித்விகா வெற்றியாளர் யார் என்று பலரும் ஆவலுடன் எதிர்நோக்கினர்.
’பிக் பாஸ்’ வீட்டிற்குள் சென்ற கமல், இருவரையும் அங்கிருந்து மேடைக்கு அழைத்து வந்தார். அப்போது வெற்றியாளர் யார் என்று பேச்சைத் தொடங்கிய கமல், ஐஸ்வர்யாவின் கைக்கு முத்தம் கொடுத்து ரித்விகாவின் கையை உயர்த்தி வெற்றியாளரை அறிவித்தார்.
தான் வெற்றி பெற்றதாக அறிவித்தவுடன், மேடையிலே கண்ணீருடன் துள்ளிக் குதித்தார் ரித்விகா. அதனைத் தொடர்ந்து ரித்விகா பேசும் போது, “வாழ்க்கையில் முதன்முறையாக முழுமையான வெற்றியை அடைந்திருக்கிறேன். முகம் தெரியாத எத்தனையோ பேர் நான் ஜெயிக்க வேண்டும் என்று வாக்களித்திருக்கிறீர்கள். அவங்க ஒவ்வொருத்தருக்கும் நன்றி.
என்னை மாதிரியே நிறைய பெண்கள் நீங்கள் வேலை செய்யும் இடத்தில், படிக்கும் இடத்தில், குடியிருக்கும் ப்ளாட்டில், பக்கத்து வீட்டில் நிறையப் பேர் இருப்பார்கள். அவங்களில் ஒருத்தியாக நினைத்து வாக்களித்து இருக்கிறீர்கள். என்னை மாதிரி இருக்கும் பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அவங்க அனைவருடைய வெற்றி இது.
கண்டிப்பாக வாழ்க்கை, போட்டி என எதுவாக இருந்தாலும் பயப்படாதீர்கள். நீங்கள் எப்படியிருந்தாலும் பரவாயில்லை, போட்டி போடுங்கள். கண்டிப்பாக வெற்றி உங்களைத் தேடி வரும். என்னோட ’பிக் பாஸ்’ வீட்டின் போட்டியாளர்கள் அனைவருடனும் விளையாடியுள்ளேன். அவங்க அனைவருக்குமே என் நன்றி. இந்த வெற்றி அவர்கள் அனைவருக்குமே சமர்ப்பிக்கிறேன்.
கமல் சார் எனக்கு உத்வேகம் அளிக்கக் கூடியவர். முதல் முறையாக நடிப்புக்கு வரும் போது, அவரைப் பார்த்து தான் வந்தேன். அவரது ’தேவர் மகன்’ மற்றும் ’நாயகன்’ படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் ’பிக் பாஸ்’ வீட்டிற்குளிருந்து அகம் டிவி வழியாக கமல் சாரைப் பார்க்கும் போது, ’தேவர் மகன்’ சக்தியாகத் தெரியவில்லை, நாயகன் வேலுநாயக்கராகவும் தெரியவில்லை. கமல் சார் அவராகவே தெரிந்தார். என்னுடைய முழு வாழ்க்கைக்கும் அவர் தான் ஆதர்சம் ” என்று குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து ’பிக் பாஸ் 2’ போட்டியாளர்கள் அனைவருமே மேடைக்கு வர, கமல் கைகளிலிருந்து ’பிக் பாஸ் 2’ கோப்பையைப் பெற்றுக் கொண்டார் ரித்விகா. தற்போது சமூக வலைதளத்தில் பலரும் ரித்விகாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
DINASUVADU
Published by
Dinasuvadu desk

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 hour ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 hour ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 hour ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago