எங்களுக்கு சென்சார் இருக்கு, சேனல்களுக்கு என்ன இருக்கு ? கோபத்தில் விஜய் சேதுபதி

Default Image

திரையில் தனது எதார்த்தமான நடிப்பாலும், திரைக்கு வெளியில் அதனை விட எதார்த்தமாக நடந்துகொள்ளும் விஜய் சேதுபதியின் குணமும் தமிழ் சினிமா ரசிகர்களை பெரிதும் கவர்ந்து இழுக்கிறது. அவர் மனதில் பட்டத்தை தைரியமாக வெளியில் சொல்லி விடுகிறார்.
சமீபத்தில் கூட விஜயின் சர்க்கார் படத்தின் போஸ்டர் வெளியாகி விஜய் புகை பிடிக்கும் போஸ்ட்டர் சர்ச்சையாகி பின்னர் அந்த போஸ்டர் வலைத்தளத்திலிருந்து நீக்கப்பட்டது. இதற்க்கு ஆதரவாக பேசிய விஜய் சேதுபதி, படங்களில் இது போன்று நடிக்க கூடாது என்று கூறுவதற்கு பதிலாக, சிகெரெட் தயாரிப்பதை நிறுத்தலாமே என கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அண்மையில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் மீண்டும் இது பற்றி கேட்கப்பட்டது. அப்போது பேசிய சேதுபதி, சினிமாக்களில் முன்னர் சிகெரெட் பிடிப்பது பெருமையாக காட்டப்பட்டது. ஆனால் இப்போது அப்படி இல்லை நாங்களே அதனை தவிர்த்து விடுகிறோம். மேலும் படம் ஆரம்பிக்கும் போதே ஒரு அருவருப்பான படத்தை போட்டு இனி புகை பிடிக்காதீர்கள் என சுட்டி காட்டுகிறோம். எங்களுக்கு சென்சார் ஒன்று எங்களுக்கு உள்ளது. ஆனால் டிவி சேனல்கள் காலையிலே காண்டம் விளம்பரம் போடுகிறார்கள், உள்ளாடை விளம்பரங்கள் போடுகிறார்கள். அதனை பற்றி என்னிடம் என் மகன் கேட்கிறான். நான் என்ன கூறுவது? எங்களுக்கு சென்சார் உள்ளது போல சேனல்களுக்கு எதுவும் கிடையாதா என கோபத்தில் பேசினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்